இயக்குனர் முத்தையாவின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா.? டைட்டில் இதோ..!

இயக்குனர் முத்தையா தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள்தான். இயக்குனர் முத்தையா இதுவரை புலி குட்டி, மருது, கொம்பன், தேவரோட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார் இப்பொழுது கூட நடிகர் கார்த்தியுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து விருமன் எனும் திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், மைனா நந்தினி, சூரி, ராஜ்கிரன், மனோஜ், சிங்கம் புலி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து அசத்தினர் படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.

அதன் காரணமாகவே கார்த்தியின் விருமன் திரைப்படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது 3 நாள் முடிவில் மட்டுமே இதுவரை விருமன் திரைப்படம் சுமார் 25 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இதனால் படக்குழுவும் இயக்குனர் முத்தையாவும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர் .

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆர்யாவுடன் முதல் முறையாக இயக்குனர் முத்தையா இணைய இருக்கிறார். இந்த படமும் கிராமத்து பின்னணியை மையமாக வைத்து உருவாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்திற்கு காதர் என தலைப்பு வைக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த கதை எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளவே ரசிகர்கள் அதிகம் ஆசைப்படுகின்றனர். நடிகர் ஆர்யாவுக்கும் கிராமத்து கதைகள் செம்மையா செட் ஆகும் என ஆர்யா ரசிகர்கள் கூறி இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

aarya
aarya

Leave a Comment