விஜய் டிவியில் நடப்படும் “Mr And Mrs” ஷோவில் இறுதி கட்டத்தை எட்டிய நான்கு போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.

சின்னத்திரையில் ஞாயிறு தோறும் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் காமெடிக்கு பஞ்சம் இன்றி மக்களை மகிழ்விக்க காமெடி ராஜா கலக்கல் ராணி, ஸ்டார் மியூசிக், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற சில நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.

இதில் மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை இரண்டு சீசன்களை கடந்து தற்போது 3வது சீசன் வெற்றிகரமாக பைனல்ஸ் வரை சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவர்களது நிஜ வாழ்க்கைத் துணையுடன் இணைந்து இப்போட்டியில் கலந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இதில் 12 ஜோடிகள் கலந்து கொண்டனர். மேலும் புது புது டாஸ்குகளையும் அறிமுகப்படுத்தி கணவன் மனைவியின் அன்யுன்யத்தை வெளிப்படுத்தும் விதமாக பல கேள்விகளும் கேட்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் வார இறுதியில் ஒவ்வொரு ஜோடிகள் வெளியேறிய நிலையில் தற்போது 5 ஜோடிகள் உள்ளனர். இதில் டாப் 5 ஜோடிகளுக்கு இடையே நடந்த டிக்கெட்டு பினாலே டாஸ்கில் சென்ற வாரம் ஜாக் மற்றும் ரோஷினி வெற்றி பெற்று முதல் பைனலிஸ்டாக சென்றுள்ளார். இந்த வாரம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் செமி பைனல் நடைபெற்று வருகிறது.

இதில் சரத் கிருத்திகா  காயத்ரி யுவராஜ் நந்தினி யோகேஷ் என மூன்று ஜோடிகளும் அடுத்தடுத்து பைனலிஸ்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது வரை நான்கு ஜோடிகள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியின் பைனல் லிஸ்ட் ஆக உள்ளனர்கள்.

Leave a Comment