ஊரடங்கு முன் TRP -ல் எந்தெந்த சீரியல் டாப் 10 இடத்தை பிடித்தது தெரியுமா.? விவரம் இதோ.

வெள்ளித் திரையில் நடித்துவரும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள்  இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் சமிபத்தில் அதிகரித்து உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் பெரும்பாலும் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அத்தகைய புகைப்படங்களை குறைந்த நேரத்திலேயே அதிக படியான லைக்குகளை அள்ளி கின்றனர் சீரியல் நடிகைகள். ஊரடங்கு உத்தரவு காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பு எடுக்க முடியாமல் போனது இதனால் வீட்டில் போரடிகமால் இருக்க சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சமூக விழிப்புணர்வு புகைப்படம் மற்றும் வீடியோவெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்த வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு மீண்டும் ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது அது என்னவென்றால் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புக்கு 60 பேரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது இதனால் சின்னத்திரை நடிகர்-நடிகைகள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னத்திரை ரசிகர்கள்  யாருடைய சீரியல் டிஆர்பி முதலிடத்தில் உள்ளது என தற்போதைய போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்  ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக எந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்தது என்பதை எப்பொழுது தேடி பார்த்து வருகின்றனர். அந்தவகையில் டிஆர்பி யில் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் எவை என்பதை தற்போது பார்ப்போம்.

1.செம்பருத்தி 2.ரோஜா 3. சித்தி 4.லட்சுமி ஸ்டோர்ஸ் 5. பாண்டியன் ஸ்டோர்ஸ் 6. ராசாத்தி 7. சந்திரலேகா 8. சத்யா 9. ஈரமான ரோஜாவே 10. நாயகி

Leave a Comment