அஜித்தின் துணிவு.. விஜயின் வாரிசு.. எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியுமா? உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

நடிகர் அஜித்குமார் தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து உள்ளார். இவருடன் கைகோர்த்து நடிகர் வீரா, மஞ்சு வாரியார், மகாநதி சங்கர், அஜய், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். தற்பொழுது படக்குழு போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் முனைப்பு காட்டி வருகிறது.

துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை குறித்து படம் ரிலீஸ் ஆகிறது. அதே தேதியில் தளபதி விஜயின் வாரிசு படமும் ரிலீஸ் ஆகுவதால் எட்டு வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரின் படமும் நேருக்கு நேர் மோத உள்ளனர். இதில் யாவரும் கை ஓங்கும் சரியாக சொல்லி விட முடியாது இரண்டு ஹீரோக்களுக்குமே..

நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். எந்த படம் சிறப்பாக இருக்கிறதோ அந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக தூக்கி விடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் தான் துணிவு திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறது.

எந்த படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும் என்பது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்காக அவர் பதில் அளித்தது என்னவென்றால் சில முறை அஜித் சார்.. விஜய் சார்.. படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகியுள்ளன துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு சமமான தியேட்டர்கள், ஸ்கிரீன்கள் தான் ஒதுக்கப்படும்..

துணிவு படத்தின் தியேட்டர் மற்றும் சேட்டிலைட் உரிமம் தொடர்பான வர்த்தகம் நான்கு மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது என அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது அஜித், விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது மேலும் இந்த தகவல் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Comment