ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஹனிமூனை கொண்டாட எந்த நாட்டுக்கு போறாங்க தெரியுமா.? இதோ முழு தகவல்.!

அண்மை காலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு அசத்துகின்றனர். அந்த வகையில் விக்கி நயன்தாரா திருமணம் செய்து கொண்டனர். அந்தப் புகைப்படம் வேற லெவலில் வைரலானது அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது.

தற்போது இணையதள பக்கத்தில் டாப் லிஸ்டில் ஒரு செய்தியாக பார்க்கப்படுகிறது. காரணம் இவர்கள் இருவரும் சத்தமே இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு வெளிவந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த ஜோடி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறது.

மேலும் பல்வேறு பேட்டிகளின் மூலம் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலும் கொடுத்து அசத்தி வருகின்றனர். தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போன ஜோடியாக இவர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்தர் தனது புது மனைவிக்காக பார்த்து பார்த்து ஒரு சில விஷயங்களை செய்து உள்ளார்.

அதாவது 300 பட்டுப் புடவை புதிய வீடு ஒன்று தங்கத்தால் இழைக்கப்பட்ட கட்டில் என மகாலட்சுமிக்காக பார்த்து பார்த்து செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. திருமணம் ஆகி சில நாட்களே ஆன நிலையில் இன்னும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஹனிமூனுக்காக எங்கும் செல்லவில்லை. அது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தனது ஹனிமூன் குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளனர். நாங்கள் இருவரும் ஹனிமூனுக்காக  குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்து உள்ளோம் அதில் முதல் லிஸ்ட்டில் இருப்பது லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான். வரும் நவம்பர் மாதத்தில் செல்ல இருக்கிறோம் என கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் விக்கி நயன்தாரா போல நீங்களும் அட்ரா சிட்டி பண்ணப் போகிறீர்களா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்..

Leave a Comment

Exit mobile version