இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் 6 வது சீசன் அண்மையில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசனில்  மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

வார வாரம் நடத்தப்பட்ட எலிமினேஷன் ரவுண்டில் குறைந்த ஓட்டுகளை வாங்கி ஒவ்வொருவரும் வெளியேறினார். இதில் காமெடி நடிகர் ஜிபி முத்து மற்றும் தனது சொந்த காரணங்களினால் கமலிடம் பர்மிஷன் கேட்டு வீட்டை விட்டு வெளியேறினார். கடைசியாக பிக்பாஸ் சீசன் 6 ல்  ஏ.டி.கே வெளியேறினார்.

அவரை தொடர்ந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள  பணப்பெட்டியை.. முதலில் கதிரவன் எடுத்து வெளியேறினார் அடுத்ததாக 13 லட்சம் மதிப்பு உள்ள பணப்பெட்டியை எடுத்து அமுதாவாணன் வெளியேறிய நிலையில் இன்று மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியே உள்ளது.

வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் புகுந்த மைனா நந்தினி சிறப்பாக விளையாண்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் இறுதிவரை பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் குறைந்த ஓட்டுக்களை வாங்கி  வெளியேறப்பட்டுள்ளார் இந்த தகவல் தற்போது மைனா நந்தினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

maina nandhini
maina nandhini

ஒரு நாளைக்கு 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரை அவர் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு நாட்கள் நீங்கள் தாக்கு பிடித்ததே பெரிய விஷயம் பரவாயில்லை நீங்கள் சம்பாதித்த தொகையை அதிகம் எனக் கூறிய அவருக்கு ஆறுதல் கொடுத்து வருகின்றனர்.

Leave a Comment