பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்பொழுது வெளிவருகிறது தெரியுமா.!உண்மையை உடைத்த பிரபல நடிகர்.

இயக்குனர் மணிரத்தினம் குறைந்த பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த நிலையில் தற்போது 800 கோடி பொருள் செலவில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்குகிறார் இது இரண்டு பாகங்களாக எடுப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம்ரவி, அதிதி ராவ் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

சமிப காலமாக மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் கோடிகளை அள்ளுவதால் இந்த திரைப்படமும் நிச்சயம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படம் தற்போது 70% மட்டுமே முடிந்துவிட்ட நிலையில் மீதி காட்சிகள் எடுக்கப்பட தீவிரம் காட்டி வருகிறது.

மீதி காட்சிகளை படமாக எடுக்க படக்குழு மும்முரமாக செயல்பட்டாலும் கொரோனா தொற்று காரணமாக படம் எடுக்காமல் படக்குழு தற்போது தள்ளாடி வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் கார்த்தியும், ரஷ்மிகா மந்தனா பேட்டி ஒன்றில் பொன்னின் செல்வன்  படம் குறித்து பேசி உள்ளனர் அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படம் நிச்சயம் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று திரைப்படம் வெளியாகும் என கூறியுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Leave a Comment