சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட விஜயை பார்த்து விஜய் சேதுபதி என்ன கூறினார் தெரியுமா.?

சில மாதங்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வந்தது. அனைத்து கட்சியினரும் மிகவும் தீவிரமாக கட்சிப் பணிகளை செய்து வந்தார்கள்.  பொதுவாக தேர்தல் என்றாலே அனைத்து கட்சிகளும் மாற்றி மாற்றி குறை கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு தீவிரமாக நடைபெற்று வந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.  இன்று தேர்தலும் முடிவடைய உள்ளது.  இந்நிலையில் தொண்டர்கள், நடிகர்,நடிகைகள் என அனைவரும் நீண்ட வரிசையில் கோரானா பாதுகாப்புடன் இடைவெளி விட்டு நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் தளபதி விஜய் சைக்கிளில் சென்று வாக்கு பதிவு செய்தார்.இவரை தொடர்ந்து அஜீத் மாஸ்க் அணியாமல் வந்த ஒரு நபரை கண்டித்தார். நடிகர் விக்ரம் நடந்து வந்து வாக்குப்பதிவு அளித்தார்.  இவர்கள் அனைவரும் தங்களைப் பார்க்கும்போது அவரது ரசிகர்கள் ஓட்டு போடுவார்கள் என்பதை ஊக்குவிப்பதற்காக இப்படி செய்து வருகிறார்கள்.

 இந்நிலையில் எதார்த்த நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று மதியம்  2:30 அளவில் தனது வாக்கை செலுத்தினார்.  அந்த வகையில் ஓட்டு போட்டு வெளியில் வந்ததும் மீடியாவிடம் என் வாக்கைப் பதிவு செய்துவிட்டேன் வாழ்க ஜனநாயகம்.  அப்புறம் கேளுங்கள் என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

 அந்தவகையில் பத்திரிக்கையாளர்கள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எப்படி உள்ளது என்று கேட்டதற்கு மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார்.இதனை தொடர்ந்து ஜாதி மதத்திற்கு எதிராக வாக்களியுங்கள் என்று கூறுவிர்கள் இப்பொழுது எப்படி என்று கேட்டதற்கு அதை நான் 2019ஆம் ஆண்டு கூறியிருந்தேன் அப்பொழுதில் இருந்து இப்போது வரை நான் மாறவில்லை என்று விஜய் சேதுபதி கூறினார்.

vijay sethupathi 01
vijay sethupathi 01

இதனைத் தொடர்ந்து விஜய் சைக்கிளில் வந்தார் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் அவரிடம் கேளுங்கள் என்று கூறி முடித்தார்.

Leave a Comment