பாக்யராஜ் ‘முந்தானை முடிச்சு’ படம் முடிந்ததும் அந்த வீட்டை என்ன செய்துள்ளார்கள் தெரியுமா.? வைரல் வீடியோ

இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் விளங்கிவரும் நடிகர் பாக்யராஜ் தனது சினிமா வாழ்க்கையில் பல வெற்றி திரைப்படங்களை தந்து உள்ளார். அந்த வகையில் இவரே இயக்கிய இவரே நடித்த படங்களும் இருக்கின்றது அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் பெற்ற திரைப்படம் தான் முந்தானை முடிச்சு.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் காட்சிகள் என அனைத்தும் கிராமத்து கதைகளத்தை வைத்து உருவாகி இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல ரிச்சினை அடைந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஊர்வசி நடித்த நிலையில் கிராமத்திற்கு வாத்தியாராக கைக்குழந்தையுடன் வரும் பாக்யராஜ் அதே கிராமத்தில் குசும்பக்கார பெண்ணாக ஊர்வசி சின்ன பசங்களுடன் சுற்றி வரும் நிலையில் பாக்யராஜ் அந்த கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவதை ஊர்வசி தொடர்ந்து பார்த்து வருகிறார்.

எனவே ஒரு கட்டத்தில் ஊர்வசிக்கு வாத்தியார் பாக்யராஜ் மீது காதல் வருகிறது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு கதைய அம்சம் உள்ள இந்த படத்தினை ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்திருந்தார். மேலும் இந்த படம் கடந்த 1983ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தது.

இந்த படத்தின் ஷூட்டிங்காக கோபி செட்டிபாளையம் அருகில் இருக்கும் ஓலப்பாளையம் என்ற இடத்தில் வீடு புதிதாக கட்டினாராம். ஷூட்டிங் முடிந்தபின் அந்த வீட்டை அந்த ஊரின் பள்ளிக்கு கொடுத்து விட்டாராம் இந்த தகவலை ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இந்த படத்தில் பாக்யராஜ் குழந்தையாக நடித்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்று கேரக்டரில் நடித்து வரும் சுசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment