விவேக் சாம்பலை அவரின் குடும்பத்தினர் என்ன செய்தார்கள் தெரியுமா.!

வெள்ளித்திரையில் எந்த நடிகரையும் பின்பற்றாமல் தனது வழியில் புதிதாக மக்களுக்கு சமூக அக்கறை கொண்ட கருத்துகளை கூறி வந்த நடிகர் தான் விவேக் இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இந்த எண்ணை விட்டு மறைந்துவிட்டார் மேலும் அவரது இழப்பை தாங்க முடியாமல் தற்போது வரை மக்கள்கள் சினிமா பிரபலங்கள் என தவித்து வருகிறார்கள்.

விவேக் மறைவிற்கு சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இரங்கலை தெரிவித்தாலும் தற்போது வரை அவர்களால் விவேக் மறைவை ஜீரணிக்க முடியாமல் திகைத்து வருகிறார்கள்.

மேலும் விவேக்கிற்கு ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் அவரால் 33 லட்சம் மரக்கன்றுகளை மட்டுமே நட முடிந்தது அவரது ஆசையை நிறைவேற்றும் படியாக தர்பொழுது அவரது குடும்பத்தினர்,சினிமா பிரபலங்கள், ரசிகர்கள்,மக்கள் என அனைவரும் பல மரக்கன்றுகளை நட்டு வைத்து வருகிறார்கள்.

vivek4

இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் சாம்பலை அவரது சொந்த ஊரான மதுரையில் உள்ள பெருங்கூதூரில் அவரது சாம்பலுக்கு பூஜை போட்டு பின்பு மண்ணில் புதைத்து அதன் மேல் ஒரு மரக்கன்றை அவரது குடும்பத்தினர்கள் நட்டு வைத்துள்ளார்கள் என ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விவேக்கின் ஆத்மா இப்பொழுது தான் சாந்தி அடையும் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்களும் மரக்கன்றுகளை தற்போது வரை நட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version