விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள “FIR” திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.? மிரளும் தமிழ் சினிமா.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார் அதன்பின்  இவர் பெரிதும் காதல், காமெடி, ஆக்ஷன் படங்களில் நடித்து வலம் வந்தவர்.

நடிகர் விஷ்ணு விஷால்  கடைசியாக நடித்த ராட்சசன், காடன் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கடவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ஒரு வழியாக மீண்டும் சிறு இடைவெளிக்கு பிறகு நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் முதலாவதாக  நடிகர் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா ஜான், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே கோடிகளை அள்ளி உள்ளது அமேசான் OTT தளம் 7 கோடி இந்த திரைப்படத்தை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் FIR திரைப்படத்தை நடிகர் தனுஷ் பார்த்துள்ளார். பார்த்துவிட்டு படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் விஷ்ணு விஷால் மற்றும் இந்த படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து உள்ளனர்.

நிச்சயம் இந்த திரைப்படம் வேற லெவல் ஒரு வெற்றியை ருசிக்கும் என அவர் போன் செய்து கூறியுள்ளதாக தெரியவருகிறது. உண்மையில் சொல்ல போனால் FIR திரைப்படம் ராட்சசன் திரைப்படத்தை விட பல மடங்கு இந்த திரைப்படத்தில் ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லர்  அதிகம் இருக்கும் என தெரியவந்துள்ளது.

Leave a Comment