தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த பிரபலங்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா.?

தமிழ் சினிமா ஒவ்வொரு ஆண்டுகளும் புதிய பரிணாமங்களை சந்தித்து வருகிறது. அதன்படி ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதைகளத்தை கொண்டு  திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பல பிரபலங்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி அவர்களுடைய சொந்த வேலை செய்து வருகின்றனர்.அப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகர்களின் தற்போது அவர்களின் நிலை என்ன என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

மைக் மோகன் :- 80 மற்றும் 90களில் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்த முன்னணி நடிகர் தான் மைக் மோகன். இவருடைய படங்களில் பெரும்பாலும் பாடகர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் இவர் மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதன் பின்னர் ஒரு சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலகி ஓய்வு பெற்றுள்ளார்.

ராஜா :- 80களில் ஒரு துணை நடிகராக அறிமுகம் ஆகி பிரபலமானவர் தான் நடிகர் ராஜா. இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற இவர் சில ஆண்டுகளிலேயே வெள்ளித் திரையிலிருந்து காணாமல் சென்று விட்டார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரும்பவும் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் தற்போது வரையிலும் சினிமாவை விட்டு விலகி உள்ளார்.

அப்பாஸ் :- 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் தான் அப்பாஸ் இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் சினிமாவில் நடித்து பிரபலமான இவர் தற்போது விளம்பர படங்களில் நடித்து தனது தொழிலை பார்த்து வருகிறார்.

கரண் :- தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் கரண். அதன் பின்னர் சில ஆண்டுகளில் திரையில் இருந்து விலகினார். 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் திடீரென பிரபலமான இவர் அனைவரையும் கவர்ந்து தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

ஷாம் :- சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் இருந்து சாக்லேட் பாய் என அனைவராலும் பாராட்டப்பட்டு பிரபலமானவர் நடிகர் ஷாம். ஆனால் வலுவான திரை கதையை தேர்ந்தெடுத்து நடிக்காததால் இவரை தமிழ் சினிமா மறந்து விட்டது.

ஜீவன்:- காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமான இவர் நான் அவன் இல்லை என்ற படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் சரியான கதைகளத்தில் தேர்ந்தெடுத்து நடிக்காததால் சினிமாவில் இருந்து மறைக்கப்பட்டார்.

மேலும் ரவி கிருஷ்ணா, நரேன், ஸ்ரீகாந்த், விக்ராந்த், சத்தியா ஆகியோர் தற்போது சினிமாவில் நடிக்காமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணி சொந்த வேலை செய்து வருகின்றனர்.

Leave a Comment