என்னிடம் கடைசியாக சொன்னது போல் நடந்து விட்டது சௌந்தர்யாவை பற்றி மனம் உருக பேசிய இயக்குனர்.?

பொதுவாகவே தமிழ் நடிகைகள் பலரும் ஒரு பிரபலமான நடிகர் இருந்தால் உடனே அவருடன் இணைந்து எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என கங்கனம் கட்டி திரிவார்கள் ஆனால் அந்த கால கட்டங்களில் இந்த நடிகையுடன் ஒரு திரைப்படத்திலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என பல நடிகர்களும் ஒரு நடிகையை தான் சுற்றி வந்தார்கள் யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாருமில்லை சௌந்தர்யா தான்.

சௌந்தர்யா தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை என்று கூட கூறலாம் இவரது  திரைப்படங்களில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர்களும் இவரது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என கேட்டு வந்தார்கள் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இவர் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் இவர் இல்லாமல் தற்பொழுதும் பல ரசிகர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள் இவர் ஏப்ரல் 17ஆம் தேதி கடந்த 2004ஆம் ஆண்டு ஒரு விமான விபத்தில் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரைப் பற்றி ஒரு இயக்குனர் ஒரு பேட்டியில் கூறியுள்ளாராம் அவர் வேறு யாருமில்லை சௌந்தர்யா உடன் பல திரைப்படங்களில் பணியாற்றிய உதயகுமார் தான் இவர் சௌந்தர்யா கடைசியாக விமானத்திற்கு செல்லும் ஒரு நாள் முன்பு எனது வீட்டில் தான் அதிக நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார் அவர் அப்பொழுது 3மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்தார்.

soundarya2
soundarya2

எனவும் சௌந்தர்யா என்னிடம் நான் சினிமா வாழ்க்கையை விட்டு விலகப் போவதாகவும் எனக்கு குழந்தை பிறந்த பின்பு எனது குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க போவதாகவும் கூறி சென்றாராம்.அதோடு அவர் சொன்ன மாதிரி ஆகிவிட்டது என்று விமானத்தில் உயிரிழந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ளாராம்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் உதயகுமார் சொல்வது போல் எங்களுக்கும் சௌந்தர்யா இருந்தால் இன்று நன்றாக இருக்குமென கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment