சிவகார்த்திகேயனின் பட டைட்டிலுக்கு சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் வசனம் என்ன வசனம் தெரியுமா.!

வெள்ளித்திரையில் மிமிக்கிரி நடிகனாகவும்,தொகுப்பாளராகவும் பல துறைகளில் இருந்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரம் போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் பின்பு கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் கதாநாயகனாக இவர் நடித்த திரைப்படம் இவருக்கு வெற்றியைத் தந்ததால் அந்த பாதையிலேயே தற்போது சென்று கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகன் என்று அவரே பல நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார் இவரது நடிப்பில் தற்போது டாக்டர் என்ற திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது அது மட்டுமல்லாமல் அயலான்,டான் உள்ளிட்ட திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் படு பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் தனது அடுத்த படத்தில் சிங்க பாதை என்ற தலைப்பு படத்திற்கு வைத்துள்ளாராம் இந்த வசனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாஜி படத்தில் இன்டர்வெல் காட்சியில் ரஜினி பேசி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

sivakarthikeyan

மேலும் இந்த தகவல் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் உங்களது படத்திற்கு சூப்பர் ஸ்டார் பேசிய வசனத்தை வைத்துள்ளீர்களா அருமை என கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version