பிக்பாஸ் சீசன் 5 – ல் இரண்டாம் இடத்தை பிடித்த “பிரியங்கா” வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 106 நாட்களை கடந்து நேற்று கோலாகலமாக நிறைவு பெற்றது. மேலும் நேற்று பைனல்சில் பாவணி, பிரியங்கா, அமீர், நிரூப், ராஜு போன்ற 5 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஐந்தாவது இடத்தைப் பெற்று நிரூப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரை தொடர்ந்து நான்காவது இடத்தை பெற்று அமீர் வெளியேறினார். பின்பு மூன்றாவது இடத்தைப் பெற்று பாவணி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மீதமுள்ள இரண்டு போட்டியாளர்களின் வெற்றியை கமல் அறிவித்தார். இதனிடையே பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மற்றும் ரன்னர் அப் பிரியங்கா ஆவார்.

மேலும் டைட்டில் வின்னர் ராஜுக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து  பிரியங்கா 106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக சம்பளமாக ரூபாய் 28 லட்சம் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 பிரியங்கா இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர்.

மேலும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வந்தார் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் இவர் தனியாக தொகுத்து வழங்கி வந்தார் இப்படி சின்னத்திரை தொகுப்பாளர்களில் முக்கிய ஒருவராக பார்க்கப்படும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே மக்களிடம் பிரபலமானவர்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் இவரது என்டர்டைன்மென்ட் மக்கள் பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்து உள்ளது. அதனால் கோடான கோடி ரசிகர்கள் இவருக்கு தற்போது உருவாகி உள்ளனர். இதனிடையே வெளியே வந்த பிரியங்காவிற்கு மக்களிடையே அவரது வரவேற்பு கூடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version