“அபிஷேக் ராஜா” மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் நுழைய காரணம் என்ன தெரியுமா.? சொன்ன ஷாக்காவிங்க..

சின்னத்திரையில் பிரம்மாண்ட பொருட்செலவில் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.  இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சில தயக்கங்களுடன் ஆரம்பித்திருந்தாலும் பின்பு இதன் வரவேற்ப்பு அபரிதமாக இருந்ததால் அதனை சீசன் சீசனாக கொண்டு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது.  மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வெவ்வேறு துறையில் இருக்கும் பிரபலங்களை உள் இறக்கி இருக்கின்றனர். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்கள்.

அதிலும் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் வைல்ட் கார்டு என்ட்ரியாக எந்த பிரபலம் நுழைய உள்ளார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இரு தினங்களுக்கு முன்பு இந்த வீட்டின் இரண்டாவது நபராக எலிமினேஷனிலிருந்து வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்துள்ளார்.

இந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் இவர்  ஓரளவுக்கு கண்டென்ட் கொடுத்து சுற்றி திரிந்து வந்தார் இருந்து மக்களுக்கு இவரை பிடிக்காமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினர். இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்றுதான் கடந்த பிக்பாஸ் மூன்றாவது சீசனிலும் வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரி ஆக வர வைத்தனர்.

இதனடிப்படையில் தற்போது தெள்ளத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால் கண்டென்ட் கொடுக்கும் நபர்களை பிக்பாஸ் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின்  நோக்கமாகும் ஏனெனில் அப்பொழுதுதான் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க முடியும் என்பதற்காக விஜய் டிவி இப்படி செய்கின்றனர் . இதனால் இனிவரும் வாரங்களில் அபிஷேக் ராஜா  இந்த நிகழ்ச்சியில் என்ன செய்யப்போகிறார்  என பார்க்கலாம்.

Leave a Comment