திருமணம் முடிந்த பிறகு நயன்தாரா நடிக்க போகும் முதல் திரைப்படம் எது தெரியுமா.?

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சினிமா உலகில் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி சூப்பராக ஓடிக் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல சங்கடங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வந்தார்

இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வேலை உண்டு தான் உண்டு என இருந்து வந்தார் இந்த நிலையில்தான் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பொழுது விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்த ஜோடி ஒருவழியாக ஜூன் 9ஆம் தேதி உறவினர்கள் நண்பர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரது முன்பும் மகாபலிபுரத்தில் ஒரு பிரம்மாண்ட இடத்தில் கல்யாணம் அரங்கேறியது. விக்கி – நயன்தாரா கல்யாணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தாலி எடுத்து கொடுத்து அசத்தினார்.

கல்யாணம் முடிந்த கையோடு விக்கி நயன்தாரா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர் அதன் பிறகு கேரளா சென்று அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் தீயாக பரவி வந்த நிலையில் திடீரென ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்று அசத்தினார்

அந்த புகைப்படங்களும் வேற லெவல் வைரலானது அதுவும் மாடர்ன் உடையில் நயன்தாரா வேற லெவலில் இருந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு வழியாக ஹனிமூனை முடித்துவிட்டு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னை வந்துள்ளார். உடனடியாக ஷாருக்கானின் ஜவான் படத்தில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment