விஜய் டிவி “மாகாபா ஆனந்த்” பங்கேற்ற ஷோவை பார்க்க நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா.?

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் மேலும் இவர் வெள்ளித் திரையிலும் வானவராயன் வல்லவராயன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கடலை, பஞ்சு மிட்டாய் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இருந்தும் இவரால் வெள்ளித்திரையில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் வந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வந்தவர் மேலும் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியை மைனா நந்தினி உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனை அடுத்து இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியையும் சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் அண்மையில் தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி கூட முடிவு பெற்றது மேலும் தொகுப்பாளி பிரியங்கா நடத்திவந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதால்..

தற்போது ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சியை மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார். இந்தநிலையில் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் புத்தாண்டு அன்று பாரீஸுக்கு சென்றுள்ளார் அங்கு மாகாபா குடும்பம் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் சிலரும் பாரீஸுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தனர்.

அதில் குக் வித் கோமாளி பாலா, சூப்பர் சிங்கர் சாம் விஷால், ரோபோ சங்கர் போன்றோரும் வந்திருந்தனர். பாரீஸில் வசிக்கும் தமிழ் சமூகத்தினருக்கு நடத்தப்பட்ட ஒரு புத்தாண்டு நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் அந்த நிகழ்விற்கு நுழைவு கட்டணம்  85 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 7200 ரூபாயாம்.

Leave a Comment