மூன்று நாட்கள் முடிவில் பொன்னியின் செல்வன் 2 வசூல் நிலவரம் என்ன தெரியுமா.? சந்தோசத்தில் ரசிகர்கள்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படங்களில் ஒன்றுதான் பொன்னியின் செல்வன் இந்த கதையை எப்படியாவது படமாக எடுத்து விட வேண்டும் என்று பல பிரபலங்களும் முயற்சித்து கைவிடப்பட்ட கதையை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார். அதிலும் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மிகவும் ரசிகர்களுக்கு பிடித்ததாக திகழ்ந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை கடந்து உலக அளவில் சாதனையும் இந்த திரைப்படம் செய்துள்ளது. தற்பொழுது 3 நாட்கள் வசூல் எவ்வளவு என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அதன்படி பார்த்தால் பொன்னியின் செல்வன் மூன்று நாட்கள் வசூல் சுமார் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தற்பொழுது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் இந்த வாரம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு கிடைத்த ஒரு நல்ல வெற்றி.

என்று கூறலாம் எனவும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்களும் தங்களது அடுத்த அடுத்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு பல பிரபலங்கள் நடித்த இந்த பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்ததை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் அடுத்ததாக எந்த திரைப்படம் உருவாகப் போகிறது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ps2
ps2

Leave a Comment