ராம்சரண், ஷங்கர் இணைந்துள்ள படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் தெலுங்கு இயகுனர்கர்கள்.

சினிமா உலகில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அசத்தி வருபவர் இயக்குனர் ஷங்கர். காலம் முன்னேற முன்னேற தற்போது இருக்கின்ற இயக்குனர்கள் பலரும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அசத்துகின்றனர். அந்த இயக்குனர்கள் சற்று பதட்டத்துடன் காணப்படுவது வழக்கம்.

ஆனால் ஷங்கர் ஆரம்பத்திலிருந்து பிரமாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து வருவதால் அவருக்கு சாதாரண விஷயம் மேலும் எவ்வளவு பட்ஜெட் போட்டால் எவ்வளவு லாபம் எடுக்கலாம் என்பதை கணக்கு வைத்து தான் அந்த பட்ஜெட் போடுவது இவரது ஸ்டைல். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அர்ஜுன் ஆகியோர்களை வைத்து.

சிறப்பான படங்களை எடுத்து வந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் வைத்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஹிந்தி மற்றும் தெலுங்கு பக்கம் அடி எடுத்து டாப் நடிகர்களுடன் கைகோர்த்து படங்களை எடுக்க ஆர்வம் காட்டி உள்ளார்.

முதலாவதாக தெலுங்கு டாப் நடிகர் ராம்சரனை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் ராம்சரணுடன் கைகோர்த்து கியாரா அத்வானி மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் சிறிது கேப் விட்டு இரண்டாவது கட்ட படப்பிடிப்பை தொடங்க ரெடியாக இருக்கிறது படக்குழு.

இந்த நிலையில் ராம் சரண மற்றும் ஷங்கர் இணைந்துள்ள இந்த படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் ஒன்று உலா வருகிறது. அதாவது இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடி என தெரியவந்துள்ளது.

Leave a Comment