“அண்ணாத்தா” படம் முதல் நாள் முதல் ஷோவில் மட்டும் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.? அசந்துபோகும் சினிமா உலகம்.

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து கிராமத்து கதையில் நடித்துள்ளார் அதனால் அண்ணாத்த படத்திற்கான எதிர்பார்ப்பு சூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து எகிறித்தான்  இருந்தது.

ஒரு வழியாக நேற்று தீபாவளியை முன்னிட்டு உலக அளவில் திரையரங்கில் வெளியிடப்பட்டது இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, அபிமன்யு சிங் என பலர் நடித்திருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்தில் இருந்து பின் நகரம் பக்கம் படமாக்கப்பட்டிருந்தது.

மேலும் அண்ணாத்த படம் அண்ணன் – தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் படமாக என்பதால் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்து இல்லதரசிகள் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது. ரஜினி படம் என்றாலே பெரிய அளவில் ரசிகர்களும் கொண்டாடுவார்கள் அந்த வகையில் இந்த படம் முதல் நாள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் அண்ணாத்த படம் முதல் நாள் முதல் ஷோ வில் மட்டும் சுமார் 11 கோடி அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அதுவும் இதில் UK மற்றும் USA ஆகிய நாடுகளை தவிர்த்து இவ்வளவு கோடி என்பது மிகப்பெரிய ஒரு விஷயம் என கூறுகின்றனர். தமிழ்நாட்டில் முதல் நாள் முதல் ஷோ கணக்கு வரவில்லை.

அப்படி வந்தால் அண்ணாத்த படம் முதல் நான் முதல் ஷோவில் மட்டுமே  20 கோடிக்கு மேல் அள்ளி இருக்கும் என கணிக்கப்படுகிறது. இதுபோன்ற விசயத்தை ரஜினிகாந்த்தால் மட்டுமே நிகழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஏனென்றால் அவருக்கு தான் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Leave a Comment