“ஐயா” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் இந்த நடிகர் தான்.! பிரம்மாண்டமாக எடுக்கலாம் என கூறி பின் குளறுபடி செய்த நடிகர் யார் தெரியுமா.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரு இயக்குனர் வெற்றிகளை குவிக்கிறார் என்றால் அந்த பெருமை இயக்குனர் ஹரியை  சாரும்.

இவர் ஆக்ஷன் கலந்த திரைப்படங்கள் எடுத்தாலும் அந்தகைய திரைப்படங்கள் அதிரி புதிரி ஹிட் அடிப்பதால் தற்போது தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்ற அந்தஸ்தை தன் பக்கம் வைத்துள்ளார்.

பிரசாந்தை வைத்து தமிழ் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் இயக்கி வெற்றி கண்டு இருந்தாலும் இவரது ஐந்தாவது திரைப்படம் அவருக்கு மாபெரும் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

சரத்குமார் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது “ஐயா” இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா, நெப்போலியன், பிரகாஷ்ராஜ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தின் மூலம் நயன்தாரா சினிமா உலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது செய்தி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஹரி இந்த திரைப்படத்தில் முதன் முதலில் சரத்குமார் கதாபாத்திரத்திற்கு கமலஹாசனை தான் தேர்வு செய்தார்.

கமலும் தேவர்மகன் போன் பிரமாண்டமாக எடுக்கலாம் என முதலில் கூறினார்.

பின்னர் கதை விவாதத்தில் ஈடுபட்டார். பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த படத்தை கைகழுவிவிட்டார்.

பின்னர் ஹரி சற்றும் யோசிக்காமல் நடிகர் சரத்குமார் இந்த படத்தில் கமிட் ஆக்கினார்.

சிறப்பான கதையை ஒரு நடிகருக்காக எப்பொழுதும் பொறுத்திருக்காது அது ஒரு சிறந்த நடிகரை எப்பொழுதும் உடனே கமிட் செய்து விடும் அதுபோல இந்த கதைக்கு மிகவும் கரெக்டாக சரத்குமார் அமைந்தார்.

இந்த படம் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த தோடு அதில் நடித்த நடிகர்களும் இயக்குனர்களும் மிகப்பெரிய அளவில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment