பொன்னியின் செல்வன் படத்தில் ஜோதிகா மற்றும் சூர்யாவுக்கு பிடித்த கதாபாத்திரங்கள் என்ன தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.!

இயக்குனர் மணிரத்தினம் திரை உலகில் எத்தனையோ படங்கள் எடுத்திருக்கிறார் ஆனால் இத்தனை படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு மணிரத்தினம் எடுத்த பொன்னியின் செல்வன் படத்திற்கு  எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்தார்.

படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார் அதன்படி படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீசானது அனைவரும் புத்தகத்தில் மட்டுமே படித்த கதை படமாக வெளியாக இருப்பதால் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை பார்க்க ஆரம்பித்தனர்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தான் இந்த படத்தை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது. படம் சூப்பராக இருந்ததால் நல்ல விமர்சனத்தை கொடுத்தனர்.  இதனால் இந்த படத்தின் வசூலும்  பட்டையை கிளப்புகிறது. இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் சுமார் 340 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களிலும் எந்த படமும் ரிலீஸ் ஆகும் ஆகாமல் இருப்பதால் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இன்னும் சில நாட்களிலேயே 500 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைக்க இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தா சினிமா பிரபலங்கள் பலரும் அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை வாழ்த்தி வருகின்றனர்.

jeyam ravi
jeyam ravi

அதில் ஒன்றாக சூர்யா – ஜோதிகா பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனக்கு பிடித்தது அருள்மொழிவர்மன் , குந்தவை தான் அதுபோல இந்த இரண்டு பேருக்கும் மட்டும் மலர் கொத்து அனுப்பி இருக்கின்றனர் அதை பார்த்த இருவருமே சூப்பராக இருக்கிறது ரொம்ப நன்றி எனக்கூறி ரிப்ளை பண்ணி உள்ளனர் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..

trisha
trisha

Leave a Comment