இந்த சூழ்நிலை விஜய்ஆண்டனியை எப்படி பாதித்துள்ளது தெரியுமா.? புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய பதில்.

சமீப காலமாக சினிமாவும், சினிமாவை சார்ந்து இருக்கும் நடிகர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் அதற்கு காரணங்கள் பல, அதில் ஒன்று கொரோனா தொற்று மற்றொன்று சினிமா பிரபலங்கள் மாரடைப்பால் உயிரிழந்த வருவதுதான்.

கொரோனா இரண்டாம் அலை தற்போது வேகமெடுத்து உள்ளதால் நம் மாநில அரசு தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தொழில்களையும் நிறுத்தி உள்ளது. அதில் ஒன்றாக சினிமா துறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் படத்தின் ஷூட்டிங் அனைத்தும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல முன்னணி ஜாம்பவன்கள் உயிரிழக்கின்றனர். மேலும் சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் முக்கிய ஜாம்பவான்கள் பலரும் மாரடைப்பால் உயிரிழந்த போவது தற்போது தமிழ் சினிமா உலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்சினிமாவில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இந்த மாதிரியான காலகட்டத்தில் நான் மிகவும் மிஸ் செய்வது ஒன்றுதான் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்று கேரக்டராக ரெடியாகுவது டயலாக்குகளை தயார் செய்வது தயாரிப்பு தொடர்பாக அவருடன் ஆலோசனை, நடிப்பு, அதற்கான உணர்ச்சி வெளிப்பாடு என மிகவும் அழகான இடம் “படபிடிப்பு தளம்” அதை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என கூறினார் மேலும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version