நடிகர் விஜயகாந்த் நடித்த நரசிம்மா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? இவருக்கா இந்த நிலைமை என கேட்கும் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் பல நடிகைகளும் தற்போது சினிமாவில் நடிக்காமல் மற்ற வேலைகளை செய்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் கடந்த 1999ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ்,ரகுவரன்,அரவிந்த்சாமி போன்ற பலர் நடிப்பில் வெளியான என் சுவாச காற்றே திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்த நடிகை இஷா கோபிகர்.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார் அதனைத்தொடர்ந்து விஜயுடன் நெஞ்சினிலே நடிகர் விஜயகாந்த் நடித்த நரசிம்மா போன்ற பல திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வந்த இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார் என்று தான் கூற வேண்டும்.மக்கள் மத்தியில் நன்றாக புகழ்பெற்று விளங்கிய நடிகை எதற்காக சினிமாவில் நடிக்கவில்லை என பல கேள்விகளையும் எழுப்பி வந்த நிலையில் இவர் கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறாராம்.

அதாவது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்குகிறார் எனவும் தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது அவரது புதிய புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

narasimma
narasimma

பார்ப்பதற்கு பழைய திரைப்படங்களில் நடித்தது போலவே இருக்கும் இவரது  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தைப் பார்த்தால் பழைய திரைப்படத்தில் இவரை பார்த்தது போலவே இருக்கிறது இந்த புகைப்படம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment