சூர்யாவின் அடுத்த இரண்டு திரைப்படங்கள் எப்படி வெளியாகிறது தெரியுமா.? தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க.!.!

மக்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மிகவும் புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் தான் சூர்யா இவரது நடிப்பில் ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று விட்டது ஜெய் பீம் திரைப்படம் முழுக்க முழுக்க இருளர் சமுதாயத்தை பற்றி தான் என்பது குறிப்பிடத்தக்கது இதில் வரும் அனைத்து சம்பவங்களும் உண்மையான சம்பவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்த திரைப்படத்தில் ரசிகர்களால் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களாலும் பாராட்டப்பட்டார் இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் இன்னும் நிறைய திரைப்படங்கள் உருவாகிக் கொண்டே போகிறது இவரது நடிப்பில் அடுத்ததாக வாடிவாசல் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்கள் வெளியீட்டிற்கு ரெடியாகி வருகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களும் இணையதளம் வழியாக தான் வெளியாகும் என பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதற்கு சூர்யாவே ஒரு பதில் கூறியுள்ளார் என ஒரு தகவல் கசிந்துள்ளது.ஆம் அதில் சூர்யா வாடிவாசல் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் கொண்டாட வேண்டிய திரைப்படங்கள்.

இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் கூறியுள்ளாராம்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த இரண்டு திரைப்படங்களையும் நாங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

surya
surya

அதிலும் குறிப்பாக வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா எப்படி பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது பற்றி எங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது கூடிய சீக்கிரம் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியானால் நன்றாக இருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment