போட்டியாளர்களுக்கு கட்டளையிடும் பிக்பாஸ்க்கு வாய்ஸ் கொடுப்பவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அந்தவகையில் பிக் பாஸ் சீசன் சீசனாக நடந்து வருகிறது. அதனை அடுத்து தற்போது பிக்பாஸ் 5 சீசன்கள் வரை நிறைவடைந்துள்ளது. மேலும் ஒவ்வொரு சீசன்களாக தொடர்ந்து 5 சீசன்கள் வரையிலுமே கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் சின்னத்திரை வெள்ளித்திரை என சிறப்பாக பயணித்து வருகின்றன. மேலும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலருக்கும் பல்வேறு ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளன. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கடந்த பிக்பாஸ் 5 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலர்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு சீசன்களிலுமே மக்களிடம் பெரிதும் பிரபலமடைந்த சில போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி வருகின்ற 30ஆம் தேதி அன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் குரலுக்கு வாய்ஸ் கொடுத்து பிரபலமானவர் சாஷோ. மேலும் இவர் இந்த நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் சஷோவுக்கு பிக்பாஸ் வாய்ஸ் கொடுப்பதற்காகவே சம்பளம் வழங்கப்படுகிறது.

அதன்படி பிக் பாஸ் ஐந்தாவது நிகழ்ச்சிக்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த சீசன் முழுவதற்கும் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம்  பதினேழரை லட்சம் ஆகும். அதன்படி ஒரு மாதத்திற்கு 5 லட்சம் என சம்பளம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Comment