நிரூப் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களுக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி நாளை எட்டியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 18 போட்டியாளர்கள் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 21 போட்டியாளர்கள் விளையாண்டனர் ஆனால் வாரவாரம் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டு மக்கள் மத்தியில் சுவாரஸ்யமில்லாத ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு முன்னேறி உள்ளனர். அந்த வகையில் ராஜு, நிரூப், பாவணி, பிரியங்கா, அமீர் ஆகியோர் இருக்கின்றனர் இன்று இறுதி நாள் என்பதால் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கடைசி ஒரு ஆள் வெற்றிக்கனியை ருசிக்க உள்ளனர்.

அந்த ஆள் யாரென்று தெரிந்து விட்டது ஆம் ராஜு பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர்.  இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் முதலாவதாக வெளியேறுவது 5வது இடத்தை தன்வசப்படுத்தி இருக்கும் நிரூப் தான். இவர் இதுவரை 106 நாட்கள் முழுவதும் இருந்துள்ளார்.

இவர் ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் சம்பளம் என பேசப்பட்டு இருந்தது. அப்படி பார்க்கையில் நிரூப் இந்த 11 வாரங்கள் இருந்து வந்துள்ளார் மொத்தையும் கூட்டி பார்க்கயில் அவர் 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பேசாமல் நிரூப் பணப்பெட்டி வந்தபொழுது இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி இருந்தாலே நல்ல பெயரும் கிடைத்திருக்கும் அதிக பணம் கிடைத்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த செயலை அவர் செய்யவில்லை இவ்வளவு நாள் இருந்து என்ன பண்ணுவது நிரூப்புக்கு பணம் கம்மியாகவே கிடைத்துள்ளது என கூறிய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்..

Leave a Comment