ரஜினி படத்திற்கு இசையமைக்க “அனிருத்” கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆடிப்போனா லைகா நிறுவனம்.!

சினிமா உலகம் புதியதை நோக்கி ஓட ஓட அதற்கு ஏற்றார் போல இசையமைப்பாளர்களும் அப்டேட்டாகி வருகிறனர். அந்த வகையில் அண்மை காலமாக இளம் இயக்குனர்கள் தான் செம மாஸ் காட்டி வருகின்றனர். குறிப்பாக யுவன்ஷங்கர் ராஜா, அனிருத் போன்றவர்கள்..

தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாற்றுகின்றனர் அதிலும் அனிருத் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து உள்ளார். இந்த வருடத்தில் மட்டுமே பிரபல இசையமைப்பாளர் அனிருத் பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் மற்றும் திருச்சிற்றம்பலம் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதில் பல பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதே வருடத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திற்கும் இசையமைத்து வருகிறார் அதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து லைகா நிறுவனம். இரண்டு திரைப்படங்களை எடுக்க இருக்கிறது இந்த இரண்டு படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார்.

இதனால்  இசையமைப்பாளர் அனிருத்தின்  மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.  அதற்கு ஏற்றவாறு போல  தற்போது தனது சம்பளத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி ஓடிக்கொண்டிருக்கிறார். இப்போ லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படத்திற்கு அனிருத் கேட்ட சம்பளத்தை பார்த்து பலரும் அதிர்ந்து போகிறனர்..

அனிருத் ஒரு படத்திற்கு  5 கோடி சம்பளம் என இரண்டு படத்திற்கும் 10 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம் இதை கேட்ட லைகா நிறுவனம் ஷாக் ஆகிவிட்டதாம் அவ்வளவு எல்லாம் கொடுக்க முடியாது முடிவெடுத்து லைகா நிறுவனம் ஒரு படத்திற்கு அனிருத்தையும் மற்றொரு படத்திற்கு ஏ ஆர் ரகுமானையும் கமிட் பண்ண திட்டமிட்டு இருக்கிறாதாம்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment