பொன்னியின் செல்வன் படத்திற்காக “மணிரத்தினம்” வாங்கிய சம்பளம் மற்றும் ஷேர் எவ்வளவு தெரியுமா.? விஜயை ஓவர்டேக் செய்தாரா..

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் பல உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து  ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டு இருக்கிறார் இருப்பினும் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதை படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.. இதற்காக பல தடவை முயற்சித்து தோல்வியை சந்தித்தாலும்..

தொடர்ந்து முயற்சித்தார். கடைசியாக லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடனும் கைகோர்த்து பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி பட்ஜெட்டில் படமாக எடுத்தார் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கோலாகலமாக திரையில் ரிலீஸானது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயராம், கிஷோர், பார்த்திபன் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து ஓடியது அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகாரிக்க ஆரம்பித்தது இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் கிட்டத்தட்ட 429. 75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் எல்லா ரைட்ஸ்சையும் சேர்த்து 189.75 கோடி பார்தது.

இதனால் படக்குழு மிகப்பெரிய ஒரு லாபத்தை பார்த்து இருக்கிறதாம் இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் ஒரு கோடியில் 30 சதவீதம் ஷேர் வைத்துக் கொண்டாலே.. 60 கோடி என இதன் மூலமும் கிடைத்திருக்கும் மொத்தமாக மணிரத்தினத்திற்கு வந்த சம்பளம் 120 கோடி இருக்கும் என கூறப்படுகிறது இது விஜய் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் வாரிசு திரைப்படத்திற்காக விஜய் 118 கோடி வாங்கியுள்ளார் அவரை விட 2 கோடி அதிகமாக மணிரத்தினம் வாங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது.

Leave a Comment