“தலைவி” படத்தின் மூன்றாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? யாரும் எதிர்பார்க்காத வசூல்.? ஷாக்கான ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் உருவாகின்றன அதில் பெரும்பாலான படங்கள் தோல்வியை கண்டாலும்  ஒரு சில திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். சமீபகாலமாக வெள்ளித்திரையில் வாழ்ந்து சாதித்த ஒரு சில பிரபலங்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் உருவாகின்றன.

அந்த வகையில் சினிமாவிலும் அரசியலிலும் வெற்றி கண்ட மறைந்த தலைவர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் ஒரு படம் வெளியாகியது இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் எடுத்திருந்தார். இந்த படத்தில் அரவிந்த்சாமி கங்கனா ரனாவத் மற்றும் சமுத்திரகனி போன்ற பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

இந்த திரைப்படம் முதலில் திரையரங்கில் வெளியாகி பின் OTT தளத்தில் வெளியாக இருக்கின்றன. இந்த திரைப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைத்து மொழியிலும் இருந்தது இந்தியாவில் 1500 திரையரங்கிலும் வெளிநாட்டில் 200 திரையரங்கிலும் வெளியானது.

நிச்சயம் இந்த திரைப்படம் 200 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாளே மிகப்பெரிய ஒரு மரண அடி கொடுத்தது. முதல் நாள் வசூல் மட்டும் 1.2 கோடி தானாம்  2 ஆம் நாள் வசூல் 1.6 கோடி வசூல் ஆனது மூன்றாவது நாள் வசூல் எப்படி இருக்கும் என சினிமா பிரபலங்கள் எதிர்பார்த்த வந்த நிலையில் வசூல் அதிகரித்து 2 கோடியை வசூல் செய்தது.

படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் மட்டும் இவ்வளவு குறைய காரணம் என்ன வீடியோ மொழி இருந்து வந்த நிலையில் மக்கள் திரையரங்கிற்கு போகாமல் வெகுவிரைவிலேயே  படம் தழுவி OTT தளத்தில் வெளியாகி இருப்பதால் அதிலேயே பார்த்துக்கொள்ளலாம் என இருப்பதால் தான் வசூல் குறைய தொடங்கி உள்ளதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதனால்தான் தலைவி படம் நன்றாக ஓடினாலும் வசூலில் பின் தங்குவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version