பிக்பாஸ் வீட்டில் 10 நிமிடம் இருந்ததற்கு “நடிகர் சரத்குமார்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் மக்கள் மத்தியில் பிக் பாஸ் சீசன் 5 யில் டைட்டில் யார் வின் பண்ணுவார் என்பதைப் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது.

தற்போது பிக் பாஸ் வீட்டில் ஏழு போட்டியாளர்கள் உள்ள நிலையில் இதில் சென்ற வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று அமீர் முதல் பைனல் லிஸ்ட் ஆகி உள்ளார். மற்ற ஆறு போட்டியாளர்களில் யார் யார் பைனல் செல்ல உள்ளார்கள் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

இதனிடையே நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு சரத்குமார் பண பெட்டியுடன் வந்து நீங்கள் அனைவரும் இதுவரை வந்ததே வெற்றி பெற்றதற்கான  அர்த்தம் தான் இருந்தாலும் பைனலில் ஒருவர் தான் வெற்றி பெறுவார் அதனை அடுத்து இந்த பணப் பெட்டியை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து போட்டியாளர்கள் பலரும் தற்போது எடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். மேலும் பண பெட்டியை வைக்கும் போது முதலில் 3 லட்சம் இருந்தது அதனை அடுத்து தற்போது ஏழு லட்சம் வரை ஏறி உள்ளது. இந்த நிலையில் இதுவரை இன்னும் யாரும் பணப்பெட்டியை எடுக்கவில்லை.

தற்போது இது குறித்து வெளிவந்த தகவல் என்னவென்றால் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு சில நேரம் சரத்குமார் வந்ததற்கு அவர் 10 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம். தற்போது இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

Leave a Comment