பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்ததற்கு நடிகர் கார்த்தி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா.? தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..

தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பல பிரபலங்களும் தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றே கூறலாம். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்கள் தற்பொழுது படத்தின் புரமோஷனுக்காக பல ஊர்களுக்கு சென்று வருகிறார்கள் அதுவும் இவர்கள் செல்லும் இடம் எங்கும் இவர்களது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டாலும் அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அவர்களுடன் புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்றவை எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அனைத்து மக்களையும் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்றுதான் நடிகர் கார்த்தி ஏற்று நடித்த வல்லவராயன் வந்தியத்தேவன் கதாபாத்திரம் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி மிகவும் அட்டகாசமாக நடித்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இருப்பினும் இந்த இரண்டாம் பாகத்தில் இவரது நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலரும் மிக ஆவலுடன் இருக்கிறார்கள்.மேலும் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதன்படி பார்த்தால் கார்த்தி இந்த இரண்டாம் பாகத்தில் ஐந்து கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக தற்பொழுது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பலரும் இவர் நடித்த வல்லவராயன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் இவர் எப்படி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார் என்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் எனவும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

karthi
karthi

Leave a Comment