தமிழில் மார்க்கெட் இல்லாத விவாகரத்து நடிகைக்கு அக்கட தேசத்தில் அள்ளிக் கொடுக்கிறார்களே.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் அறிமுகமான முதல் படமே சர்ச்சைக்குரிய படமாக வெளியானது அதன் பிறகு மைனா என்ற ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான அமலா சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால். ஆனால் அமலா பால் மற்றும் ஏ எல் விஜய்க்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நடிகை அமலா பால் கடைசுயாக கடாவர் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு அதோ அந்தப் பறவை போல என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவ்வப்போது வாய்ப்புக்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஆனால் எவ்வளவு மெனக்கெட்டு இருந்தாலும் நடிகை அமலா பாலிற்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் நடிகை அமலா பாலின் மார்க்கெட் முழுமையாக சரிந்து விட்டது என்று கூறப்படுகிறது.

தமிழில் வாய்ப்பில்லை என்றாலும் ஹிந்தி பக்கம் திரும்பி அமலா பால் அங்கு தற்போது ஒரு படத்திற்கு 25 லட்சம் சம்பளமாக வாங்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. அப்படி சமீபத்தில் அமலா பால் நடிப்பில் உருவான போலோ என்ற திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்திற்காக நடிகை அமலா பால் 25 லட்சம் சம்பளம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் ஹிந்தியில் ஒரு ரவுன்ட் வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டுகிறது.

Leave a Comment