சின்னத்திரை நடிகை சித்ரா கடைசியாக எப்படி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் தெரியுமா இணையதளத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படங்கள்.!

தொகுப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் பல திறமைகளைக் கொண்டு சின்னத் திரையில் வலம் வந்தவர் சித்ரா இவர் முதலில் தொகுப்பாளினியாக இருந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார் அதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வரும் பொழுது இவர் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

மேலும் இவர் கடந்த வருட டிசம்பர் 9ஆம் தேதி ஒரு சில காரணங்களை குறித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாள்தோறும் இவரைப் பற்றி இணையதளத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் இந்நிலையில் அதேபோல் சமீபத்தில் கூட சித்ராவின் ஹேண்ட் பேக்கில் 150 கிராம் கஞ்சாவும் அதை சிகரெட்டில் லோடு  செய்யும் கருவியும் காவல்துறையினர் கண்டெடுத்ததாக தகவல் இணையதளத்தில் வெளியாகியதை நாம் பார்த்தோம்.

இதையடுத்து சித்ரா கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியூசிக் இந்த நிகழ்ச்சி அவர் மறைந்த பின்பும் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

மேலும் அந்த நிகழ்ச்சியின்போது சித்ரா கடைசியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் பார்த்து வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இந்த புகைப்படங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version