நடிகர் முரளியின் இரண்டாவது மகன் தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? இணையத்தில் வைரலாகும் சூப்பரான புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்று கொடிகட்டி பறந்து வந்த நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகராக திகழ்பவர் முரளி இவரது நடிப்பில் அந்த காலத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் மிகவும் புகழ்பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கி விட்டது.

அந்த வகையில் பார்த்தால் முரளி நடிப்பில் வெளியான இரணியன், வெற்றிகொடிகட்டு,சுந்தரா டிராவல்ஸ்,பொற்காலம் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவர் தொடர்ந்து பலவகையான திரைப்படங்களில் நடித்து வந்தார் தமிழைத் தவிர்த்து கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து மறக்க முடியாத நடிகராக மாறிவிட்டார்.

மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் தமிழ் திரையுலகை விட்டு பிரிந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் அதனைத் தொடர்ந்து இவரது மகன் அதர்வாவும் தற்பொழுது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த இரும்புக்குதிரை, இமைக்காநொடிகள்,100,பரதேசி,கணிதன்,சண்டிவீரன் போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இவரும் தொடர்ச்சியாக தற்போது பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

murali2
murali2

பொதுவாகவே முரளிக்கு நாம் அதர்வா மட்டும்தான் மகன் என்று நினைத்து வருகிறோம் ஆனால் நடிகர் முரளிக்கு இரண்டாவது மகனும் உள்ளார் ஆம் அவரது பெயர் ஆகாஷ் முரளி என்பதாகவும் இவரை பெரும்பாலும் மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள் அந்த வகையில் தற்போது இவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்தப் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவரது தம்பியும் இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

Leave a Comment