மிஷ்கின் இயக்கத்தில் உருவாக இருக்கும் அஞ்சாதே – 2 .? ஹீரோ யார் தெரியுமா.? இணைய தளத்தில் வேகம் எடுக்கும் செய்தி.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் இயக்குனர் மிஷ்கின் இவரது திரைப்படங்கள் பல்வேறு சமூக அக்கரை உள்ள கருத்துகளை எடுத்துரைக்கும் படமாகத்தான் இதுவரை இருந்து வந்துள்ளன.

மேலும் இவரது படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பிசாசு 2. முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகத்தை ஆண்ட்ரியாவை வைத்து எடுத்து முடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்பது படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது. அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் எந்த மாதிரியான  படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் தற்போது உலா வருகின்றன அஞ்சாதே முதல் பாகம் 2008ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த தொடர்ந்து

அதன் இரண்டாம் பாகம் உருவாக முனைப்பு காட்டுகிறார் இந்த படத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்து ஹீரோகளில் ஒருவரான நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த படத்தை நேமிசந்த் ஜபக்கோடு இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.

மிஷ்கினும், அருண் விஜய்யும் இணைந்து தயாரிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தை இயக்குனர் மிஷ்கின்வேற லெவெலில் எடுக்க முனைப்பு காட்ட இருக்கிறார். வெகுவிரைவிலேயே இந்த கூட்டணி இணைவது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.

Leave a Comment

Exit mobile version