நடிப்புக்கும், விக்ரமுக்கும் சம்பந்தமே கிடையாது.? பேட்டியில் பகிரங்கமாக சொன்ன பிரபல இயக்குனர்.

தமிழ் சினிமா உலகில் இயக்குனரும் நடிகருமான ராஜ்குமார் நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் போன்ற சில படங்களை இயக்கியவர். ராஜ்குமார் மற்றும் பிரபல நடிகை தேவயானி இருவரும் படப்பிடிப்பின்போது காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர் இயக்கிய படங்களில் பெரிதும் நடிகையாக தேவயானியையே தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ராஜ்குமார் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் குறித்தும் நடிகர் விக்ரம் குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார்.

அந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், சரத்குமார், குஷ்பு, தேவயானி போன்ற பல பிரபலங்களும் நடித்துள்ளனர். ஒருமுறை நடிகர் விக்ரம் விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பதால் எனக்கு அந்த படம் அதிகம் பிடிக்கவில்லை என கூறியிருந்தார்.

அதையடுத்து தற்போது இயக்குனர் ராஜ்குமார் இந்தப்படம் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தான் இருந்தது ஆனால் விக்ரம் ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. மேலும் இந்த படத்தின் மூலம்தான் நடிகர் விக்ரம் பெரிதும் பிரபலமடைந்தார். ஆனால் விக்ரம் நினைத்துக் கொண்டிருக்கிறார் சேது படம் தான் தன்னை பிரபலமாக்கியது.

என, உண்மையைச் சொல்லப்போனால்  விக்ரமுக்கு சுத்தமாக நடிக்கவே தெரியாது அவர் நடித்தால் ஒன்று கமலஹாசன் போல அல்லது ரஜினி போல மட்டும் தான் நடிப்பார் மத்தபடி விக்ரம் நல்ல நடிகர்  என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என அவரது கருத்தை ஓப்பனாக கூறியுள்ளார்.

Leave a Comment