சமந்தாவுக்கும், எனக்கும் விவாகரத்தா.? முதல் முறையாக பேசிய நாக சைதன்யா.! இப்படி சொல்லுவார் என்று யாருமே எதிர்பார்க்கல..

சினிமா உலகில் இருக்கின்ற நடிகைகள் எடுத்த உடனேயே இரண்டு மூன்று படங்களில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் நல்ல இடத்தை படித்தாலும் போகப்போக பட வாய்ப்புகள் அதிகமாக வருவதால் படத்தை சரியாக தேர்வு செய்யாமல் நடித்து வருவதால் ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுகின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் பல்லாவரத்தை  சேர்ந்த பொன்னான சமந்தா.

முதலில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்தார் அதுவே அவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தர அடுத்தடுத்து உடனே பட வாய்ப்பை கைப்பற்றாமல் சிறப்பான கதைகளை தேர்வு செய்தார் அப்படி அவர் எடுத்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் மேலும் அந்த படங்களில் பெரிதும் கவர்ச்சியும் காட்டமல் தான் நடித்தார். அதன் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்து இழுத்தார். தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற பிறகுதான் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு படங்களில் நடிக்கிறார்.

மேலும் சமூக வலைதளங்கள் பக்கத்திலும் செம்ம மாஸ் காட்டுகிறார். அது அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைகிறது. இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தெலுங்கில் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவரும் சினிமாவையும் தாண்டி நிஜத்தில் சிறப்பான ஜோடிகளாக இருந்து வந்தனர்.

இருப்பினும் சமந்தா ஒரு சில படங்கள் மற்றும் சீரிஸ்களில் நடிக்கும் பொழுது சில சர்ச்சைகள் எழுந்து வந்தன அதனையே பெரிதாக ஊதி நாக சைதன்யாவும், சமந்தாவும் விவாகரத்து செய்யப் போவதாக சமீபகாலமாக ஊடகங்கள் தெரிவித்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன்முறையாக சமந்தாவின் கணவர் நாக சைதன்யா பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி உள்ளார். சமிபகாலமாக விவாகரத்து  பற்றிய செய்தி எனக்கு மிகப்பெரிய வேதனையை கொடுத்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை இன்னொரு செய்தி உடனே வந்து மறைத்து  விடுகிறது. ஒரு செய்தி பரபரப்பாக இருந்தால் நாளை இன்னொரு செய்தி பரபரப்பாக இருக்கிறது முந்தையநாள் செய்தியை மறந்து விடுகின்றனர். இந்த புரிதல் எனக்கு வந்த உடன் நானும் கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன் என கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment