ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் வெற்றிமாறன்.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்..

தமிழ் திரை உலகில் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் வெற்றிமாறன் இவரது இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி தொடர்ச்சியாக பல பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் வகையில் பல திரைப்படங்களை ரசிகர்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கொடுத்துவிட்டார்.

அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் நடிகர் சூரி அவர்களை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலையும் பெற்றுவிட்டதாம். மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் பல விதமான கேள்விகளை இவரிடம் கேட்டு வந்தார்கள்.

அதேபோல் இவரும் இன்னும் இரண்டாம் பாகத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக எடுக்கப்பட வேண்டும் அது மட்டும் எடுத்து விட்டால் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் வெளிவந்து விடும் என்று இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் ரசிகர்களுக்கு அறிவித்தார். இதைத் தொடர்ந்து பார்த்தால் இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படமும் இரண்டாம் பாகம் எப்பொழுது உருவாகும் என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் கதையும் வெற்றிமாறன் அவர்கள் பிரமாண்டமாக எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலைமையில் இதுவரை பலரும் பார்த்திராத இயக்குனர் வெற்றிமாறன் அவரது புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஆம் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வெற்றிமாறன் ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

vetrimaran
vetrimaran

Leave a Comment