குஷ்பு மட்டும் என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் இந்த அழகு நடிகையை தான் காதலித்திருப்பேன் இயக்குனர் சுந்தர் சி ஒரே போடு.!

தமிழ் சினிமாவில் மக்களை மகிழ்விக்கும் வகையில் படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சுந்தர் சி. இவர்  இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.  மேலும் சினிமாவில் மக்களால் கொண்டாடப்பட்ட பலர் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள்.  அந்த வகையில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா சினேகா என பலரை கூறிக்கொண்டே போகலாம்.

இந்த லிஸ்டில் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஜோடிகளாக இருப்பவர் சுந்தர் சி மட்டும் குஷ்பூ  இந்த ஜோடியை மக்களுக்கு மிகவும் பிடிக்கும், அதேபோல் சமீபகாலமாக குஷ்பு தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிக லைக்ஸ் பெற்று வருகிறார்.

நடிகை குஷ்பு நடிகையாக இருந்தாலும் ஒரு பக்கம் அரசியல் என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார். அதேபோல் சுந்தர்சி படங்களை இயக்குவதில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் சமீபத்தில்கூட சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை மூன்றாவது பாகம் வெளியானது.

அதேபோல் நடிகை குஷ்பூ ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் குஷ்பூ அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் சுந்தர் சி சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அவர் பேசும்பொழுது என்னுடைய வாழ்க்கையில் குஷ்பு மட்டும் வரவில்லை என்றால் நான் நடிகை சவுந்தர்யாவுக்கு ப்ரொபோஸ் செய்து இருப்பேன் என ஒரே போடாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஒருவேளை நடிகை சௌந்தர்யாவை நான் திருமணம் செய்து கொண்டிருந்தால் இப்பொழுது உயிரோடு இருந்திருக்கலாம் என பலமுறை என்னுடைய மனைவி குஷ்புவிடம் கூறியுள்ளேன் என அந்தப் பேட்டியில் கூறினார். சுந்தர் சி மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

ஆனாலும் அதனை வெளிப்படையாக கூறியுள்ளதால் பல ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

sundarya
sundarya

Leave a Comment