பாய்ஸ் திரைப்படத்தின் போது “நடிகர் பரத்தை” லெப்ட், ரைட் வாங்கிய இயக்குனர் ஷங்கர்..! அதுக்குன்னு 1000 பேருக்கு முன்னாடியா இப்படி பண்றது..

நடிகர் பரத் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் நல்ல நல்ல படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் நடித்த படங்கள் தோல்வி படங்களாக மாறின இதனால் தற்பொழுது பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். நடிகர் பரத் முதலில் நடனத்தில் தான் தனது பயணத்தை ஆரம்பித்தார் ஆனால் ஒரு கட்டத்தில் நடிகனாக விஸ்வரூபம் எடுத்தார்.

முதலில் இவர் பாய்ஸ் திரைப்படத்தின் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார் அதன் பிறகு காதல், வெயில், எம் மகன் என்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததனால் அவரது கேரியர் மாறியது . இப்பொழுது ஒன்று, இரண்டு திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன அதில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று சில விஷயங்களை போட்டு உடைத்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. பாய்ஸ் திரைப்படத்தின் போது  நான் சினிமா உலகில் அறிமுகம் அந்த படத்தை ஷங்கர் எடுத்து வந்தார் அப்பொழுது ஒரு காட்சியில் ஷங்கர் என்னை கண்டபடி திட்டி விட்டார் என கூறினார்.

அவர் அவ்வாறு செய்ய காரணம் பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மாரோ, மாரோ பாடலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது அப்பொழுது ஒரு காட்சியில் கிட்டத்தட்ட 1000 பேர் தக்காளியை தூக்கி எறிய வேண்டும் அனைவரும் தக்காளியை ஏறிய நான் மட்டும் எரியாமல் உட்கார்ந்து கொண்டேன். ஷங்கர் சார் பார்த்துவிட்டார் அப்பொழுது என்னை அழைத்து அங்கிருந்து 1000 பேருக்கும் முன்னாள் என்னை பார்த்து நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க..

ஒரு காட்சி எடுக்க என்ன செலவாகும் தெரியுமா என்று அனைவரும் முன்னால் கண்டபடி கத்தினார். நான் சின்ன பையன் எனது கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வந்துவிட்டது அதன் பின் அவர் என்னை தனியாக அழைத்து சினிமாவில் ஒவ்வொரு காட்சியும் எடுக்க அதிக செலவு இருக்கிறது இது சாதாரண விஷயம் கிடையாது. நீ இப்படி செய்ததால் நான் மறுபடியும் இந்த காட்சியை எடுக்க வேண்டும் என்று அவரை நிலையை எனக்கு தெளிவுபடுத்தியதாக கூறினார்.

Leave a Comment