தன்னுடைய பிளாக்பஸ்டர் படங்களிலேயே வழக்குகளில் மாட்டும் இயக்குனர் ஷங்கர்.! இந்த தடவ எந்த நடிகர் படம் தெரியுமா..

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் தான் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தையாவது கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் அதுபோல தற்போது பிரபலமடைந்த இயக்குனருக்களும் பின்பற்றி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது வருடத்திற்கு ஒரு படத்தையாவது மிகப்பெரிய பொருட்செலவில் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழில் கடைசியாக 2.0 திரைப் படத்தை எடுத்திருந்தார் அதன் பிறகு இவர் கமலை வைத்து இந்தியன் 2 என்ற திரைப்படத்தை எடுக்க முனைப்பு காட்டினாலும்  ஷூட்டிங் தொடங்கபட்ட நாளில் இருந்தே பல பிரச்னை ஏற்படுத்தியதால் தற்போது அது டிராப் செய்யப்பட்டது.

இதையடுத்து சங்கர் அடுத்த கட்டத்தை நோக்கி முனைப்பு காட்டி வருகிறார் அந்த வகையில் விக்ரமை வைத்து 2005ஆம் ஆண்டு அந்நியன் என்ற மாபெரும் பிளாக்பஸ்டர் படத்தை எடுத்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக சங்கர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இப்படி இருக்க மிகப்பெரிய சிக்கல் ஒன்றை சங்கருக்கு ஏற்பட்டுள்ளது அது என்னவென்றால் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் ஒன்றை சங்கருக்கு அனுபவம் உள்ளாராம்.

சங்கர் அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ள நிலையில் தன்னிடமும் முறையான தடையில்லா சான்றிதழ் பெறவில்லை எனவே வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment