எனக்கு இப்படிப்பட்ட ஒரு உறவு 23 வருடங்களாக கிடைக்கவில்லை.! என வருத்தத்தில் செல்வராகவன்..

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது ஹீரோவாகவும் நடித்து கலக்கி வருபவர் தான் செல்வராகவன். சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவருடைய நடிப்பில் கடைசியாக பகாசூரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. வசூல் ரீதியாக பெரிதாக வெற்றி இல்லை என்றாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் வகையில் அமைந்தது.

அதாவது பெண் குழந்தைகள் போன் உபயோகப்படுத்தப்படுவதை பெற்றோர்கள் அதனை கண்காணிக்க வேண்டும் எதை எதை பார்க்க வேண்டும் எதையெல்லாம் பார்க்கக்கூடாது என்பதனை சொல்லித் தர வேண்டும் என முழுக்க முழுக்க பெண் குழந்தைகளை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. செல்வராகவன் சின்ன வயதில் இருந்தே படங்களை இயக்க வேண்டும் என சினிமாவில் மிகவும் ஆர்வமுடன் இருந்து வந்துள்ளார்.

ஆனால் இவருடைய தந்தை தன்னுடைய மகன் படித்து பெரியாளாக வேண்டும் என நினைத்து வந்த நிலையில் செல்வராகவன் படிக்கவே இல்லை. இதன் காரணமாக செல்வராகவனை வெளிநாட்டிற்கு அனுப்பி உள்ளார் ஆனால் அங்கு சென்றும் செல்வராகவன் படிக்கவில்லை என்பதால் பிறகு சினிமாவில் படங்களை இயக்க அவருடைய இஷ்டத்திற்கு விட்டு விட்டார்.

பிறகு தனுஷை வைத்து தொடர்ந்து சில திரைப்படங்களை தந்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அந்த வகையில் காதல் கொண்டேன் திரைப்படத்தினை செல்வராகவன் இயக்கிய நிலையில் இந்த படத்தில் சோனியாக அகர்வால் நடித்திருந்தார். இந்த படத்தின் படப் பிடிப்பின் போது இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு பிறகு இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபட்டு ஏற்பட்டதால் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிறந்தனர். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். எப்படிப்பட்ட நிலையில் செல்வராகவன் டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

அதாவது, அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள் எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாக உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன,  என பதிவு செய்துள்ளார்.

Leave a Comment