சினிமாவிற்கு வருவதற்காக செருப்பால் அடி வாங்கிய இயக்குனர் செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்து உள்ளவர்தான் செல்வராகவன். தற்பொழுது மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்த பபாசூரன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து கலக்கி உள்ளார். இந்த படம் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையில் அமைந்துள்ளது.

அதாவது, இந்த காலகட்டத்தில் ஒரு பெண் குழந்தை போனில் என்ன பார்க்க வேண்டும் எதிர்பார்க்கக் கூடாது என பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும் மேலும் பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் அவர்களுடைய நடத்தையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினை இந்தப் படம் கூறுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பகாசூரன் திரைப்படம் வெளியான அன்று தன்னுடைய அண்ணனுக்கு போட்டியாக தனுஷின் வாத்தி படமும் வெளியானது இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்று வரும் நிலையில் இருந்தாலும் நல்ல கருத்து கூறுவதில் வாத்தி படத்தினை பகாசூரன் படம் தோற்கடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இவ்வாறு தன்னுடைய தம்பியை வைத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த செல்வராகவன் சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது மிகவும் ஆர்வமுடையவராக இருந்துள்ளார். எனவே படிப்பில் கூட கவனம் செலுத்தாமல் இருந்து வந்த செல்வராகவன் மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவ்வாறு செல்வராகவனைப் போலவே அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவும் இயக்குனர்  என்பதில் சினிமாவில் மிகவும் ஆர்வம் இருந்துள்ளது.

ஆனால் தன்னுடைய மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதினால் கஸ்தூரிராஜா ஒழுங்காக படிக்க வைத்து பெரியாளாக வேண்டும் என எண்ணி உள்ளார். எனவே வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கலாம் என்று கஸ்தூரிராஜா முடிவு செய்து இருந்தார். ஆனால் அங்கும் சினிமாவின் மீது இருந்த ஆசையினால் ஒழுங்காக படிக்காமல் சுற்றியுள்ளார் செல்வராகவன். எனவே ஒழுங்காக படிக்க சொல்லி செல்வராகவனை அவருடைய தந்தை கஸ்தூரிராஜா செருப்பால் அடித்துள்ளார்.

இருந்தாலும் விடாப்பிடியாக செல்வராகவன் இருந்த நிலையில் தன்னுடைய மகனின் ஆசையை புரிந்து கொண்டு சினிமாவிலேயே அவருக்கு வாய்ப்பைப் பெற்று தந்துள்ளார். இவ்வாறு சினிமாவிற்கு அறிமுகமான செல்வராகவன் பிறகு தன்னுடைய தம்பியை செதுக்கி ஒரு நல்ல ஹீரோவாக மாற்றினார். இவ்வாறு தனுஷ் சிறந்த நடிகராக இருப்பதற்கு செல்வராகவனும் ஒரு காரணம்.

Leave a Comment