சமீபத்தில் சினிமாவில் என்ட்ரியான ஹீரோவை வைத்து படம் எடுக்கப் போகும் பிரம்மாண்ட இயக்குனர்..!

director sangar latest movie update: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக பல மெகா ஹிட் திரைப்படங்களை உருவாக்கி சாதனை படைத்தவர் தான் இயக்குனர் சங்கர்.  பெரும்பாலும் இவர் இயக்கும் அனைத்து திரைப்படங்களுமே மிகப்பெரிய முதலீடு எடுக்கப்படும் திரைப்படமாகவே இருக்கும்.

இவ்வாறு தமிழ் திரை உலகில் மாபெரும் இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சங்கர் சமீபத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகரை வைத்து திரைப்படம் எடுக்கப் போகிறாராம்.  இவ்வாறு வெளிவந்த செய்திகள் மூலமாக தமிழ் சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளது.

ஏனெனில் இயக்குனர் ஷங்கர் இதுவரை முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே தான் திரைப்படங்கள் எடுத்துள்ளார். அந்தவகையில் விஜய், ரஜினி, விக்ரம், கமல் , போன்ற நடிகர்களை இயக்கி மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன், ஜென்டில்மேன், சிவாஜி அன்னியன், நண்பன், எந்திரன் போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான துருவ் விக்ரமை வைத்து இயக்குனர் சங்கர் திரைப்படம் இயக்க உள்ளாராம். இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளார்கள்.

dhruv vikram
dhruv vikram

Leave a Comment