சினிமாவில் என்ட்ரி ஆகும் போது இயக்குனர் சமுத்திரகனி வாங்கிய முதல் சம்பளம்..! எவ்ளோ கஷ்டபட்டிருகாரு இந்த மனுஷன்..!

director samuthirakani first salary in cinema: தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்து தன்னை மிக பிரபலமாக வைத்துக் கொண்டவர் தான் நடிகர் சமுத்திரக்கனி. இவர் திரைப்படம் இயக்குவது மட்டுமல்லாமல் பல சீரியல்களில் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

அந்தவகையில் நடிகர் சமுத்திரகனி சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் காரணமாக எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் இதை தொடர்ந்து நாடோடிகள் திரைப்படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி இயக்குனர் என்ற பட்டத்தை பெற்றார்.

இதை தொடர்ந்து அவர் நாடோடிகள் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருந்தாலும் அவருடைய சொந்த விருப்பு வெறுப்புகளை இந்த திரைப்படத்தில் திணித்ததன் மூலமாக அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் முதல் முதலாக சினிமாவில் பாண்டியராஜன் நடிப்பில் வெளிவந்த படிக்கிற வயசுல என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் ஆம் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு நாளைக்கு பத்து ரூபாய் என்ற விதத்தில் சம்பளம் பெற்றாராம்.

இவ்வாறு தனது திறமையின் மூலமாக படிப்படியாக முன்னேறிய சமுத்திரகனி சமீபத்தில் ராஜமௌலியின் திரைப்படத்தில் எனக்கு சம்பளமே வேண்டாம் என நடித்துக் கொடுத்தாராம் ஆனால் ராஜமவுலி அவரை ஒரு நடிகராக கருதி 2 கோடி வரை சம்பளம் கொடுத்து அவரை கௌரவப்படுத்தி விட்டாராம்.

இவ்வாறு வெளிவந்த செய்தியில் மூலமாக ரசிகர்கள் இவ்வளவு பிரமாண்டமான நமது இயக்குனர் வாங்கிய முதல் சம்பளம் இவ்வளவா என ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறார்களாம்.

samuthirakani
samuthirakani

Leave a Comment