போகிற இடத்திலெல்லாம் கன்னி வெடி வைக்கிறாங்க.. புலம்பும் ரஜினி பட இயக்குனர்.!

இளம் இயக்குனர்கள் அண்மை காலமாக டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் நெல்சன் திலிப் குமார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், அண்மையில் தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என பல வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் என்னும் படத்தை எடுக்க உள்ளார் இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ஷூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது மிக பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தை எடுக்கப்பட குழு திட்டம் போட்டு உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் பட குழுவுக்கு ஒரு ஷாக்கான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து.

படத்தை எடுக்கலாமா என படகுழு திட்டம் போட்டு உள்ளது ஆனால் ஆந்திராவில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் ஆரம்பித்துள்ளனர் இதனால் சினிமாக்காரர்கள் அதுவும் தொழிலாளர்கள் வேலையை நிறுத்தவும் செய்வதால் இவர்கள் இல்லாமல் படத்தை எடுக்க முடியாது.

இதனால் தற்பொழுது ஜெயிலர் பட குழு செம அப்சட்டில் இருக்கிறதாம் குறிப்பாக நெல்சன் படத்தை ஆரம்பிக்கும்போதே தடங்கலா எனக் கூறி புலம்பி வருகிறாராம். வேலை நிறுத்தம் காரணமாக உள்ளூர் சினிமாவே அங்கு ஆட்டம் காணும் நாம் வேறு தமிழகத்திலிருந்து ஆந்திரா பக்கம் போவதால் படத்தை நடத்த அதிகபட்சம் வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது இதனால் நெல்சன் நாலாபக்கமும் சுத்தி அடிக்கிறாங்களே எனக்கூறி புலம்பி தவித்து வருகிறார்.

Leave a Comment

Exit mobile version