சொன்னதை செய்து காட்டிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.! அசந்துபோன டாக்டர் பட ஹீரோ.? வெளியான உண்மை செய்தி.

சினிமா உலகில் எடுத்தவுடனேயே மிகப்பெரிய ஒரு வெற்றிப் படத்தை கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல அதுவும் நயன்தாரா யோகி பாபு வைத்து முழுக்க முழுக்க காமெடியை புகுத்தி செம சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார்.

அதன்பிறகு டாப் நடிகர்கள் தொடங்கிய இளம் நடிகர்கள் பலரும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டினார். அடுத்த படமே சிவகார்த்திகேயனுக்கு கதைசொல்லி டாக்டர் என்னும் காமெடி திரைப்படத்தை எடுத்து கொடுத்து உள்ளார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் வசூல் ரீதியாகவும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரையிலும் கோடிகளை குவித்து வருகிறது இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடை கண்டு வருகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் டாக்டர் திரைப்படத்தின் வசூல் மட்டும் குறைக்க முடியாமல் இருந்து வருகிறது.

அந்த அளவிற்கு திரைப்படம் சிறப்பாக தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு கதை சொல்லி பீஸ்ட் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார். மேலும் இந்த படத்தின் சூட்டிங் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நெல்சன் திலீப் குமார் குறித்து டாக்டர் திரைப்படத்தில் நடித்த கிளி என்கின்ற சிவா அரவிந்த் தகவல்களை கூறியுள்ளார்.

சிவா அரவிந்த் நெல்சன் திலீப் குமாரின் கல்லூரி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது நெல்சன் டிலிப்குமர் சொல்வாராம் நான் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு கட்டத்தில் எப்படியாவது தளபதி விஜயை வைத்து படம் இயக்குவேன் என்று அது தற்பொழுது நடந்து விட்டது மேலும் அவர் தளபதி விஜயின் வெறியன் அதனால் இந்த திரைப்படம் வேற லெவல் இருக்கும் என கூறியுள்ளார்.

Leave a Comment