தமிழ் சினிமாவை கட்டியாளும் இரண்டு நடிகர்களை வைத்து படம் பண்ணாமல் இருக்கும் இயக்குனர் ஹரி – வெளிச்சத்திற்கு வரும் உண்மை.!

தமிழ் சினிமா உலகில் கமர்சியல் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஹரி. இவர் சிம்ரன் பிரசாந்தை வைத்து தமிழ் என்னும் திரைப்படத்தை இயக்கி சினிமா உலகில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்து ஹரி தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டார்.

மேலும் நடிகர் விக்ரம் சூர்யாவையும் மிகப்பெரிய அளவில் வளர்த்து விட்டார். இவர் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்துள்ளன அந்த வகையில் சாமி, கோவில், அருள், சாமி ஸ்கொயர், சிங்கம் 1,2,3 ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அசத்தினார் குறிப்பாக சூர்யாவை வைத்து மற்றொரு கமர்ஷியல் படத்தை கொடுப்பார்..

என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் சூர்யாவோ இயக்குனர் ஹரியை விட்டுவிட்டு பாலா, வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். இது இயக்குனராக கோபத்தை ஏற்படுத்தவே சூர்யாவுக்காக பார்த்து பார்த்து உருவாக்கிய கதையில் நடிகர் அருண் விஜய்யை நடிக்க வைத்து தற்போது யானை என்னும் திரைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்த படம் வெகுவிரைவிலேயே வெளியாகும் என கூறப்படுகிறது. இயக்குனர் ஹரி பல்வேறு டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒரு சில நடிகர்களை வைத்து படங்களை எடுத்ததே கிடையாது அவர் அந்த நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் இப்பொழுது அவரது மார்க்கெட் தொட முடியாத உச்சத்தில் இருக்கும்.

ஆனால் அது இன்றுவரை செய்ததே கிடையாது தனக்கென ஒரு வரைமுறையை வைத்துக் கொண்டு அவர் பயணித்து வருகிறார் ஹரி இதுவரை அஜித் – விஜயை வைத்து எடுத்ததில்லை என்பது குறிப்பிடதக்கது. இது பலருக்கும் ஆச்சரியத்தை என்று அவரிடம் கொடுத்து வருகிறாராம்.

Leave a Comment